The dreaded Sethuism!

Tuesday, January 29, 2008

மளிகைக் கடையில் ஒளிமயமான வினாடிகள் (lighter moments)

மளிகைக் கடையில் ஒளிமயமான வினாடிகள் (lighter moments)


இந்த பதிவில், கடைகளில் நான் எதிர்கொண்ட சில காமடி பற்றி எழுதியுள்ளேன்:

ஒன்று:

சில வருடங்களுக்கு முன், நான் சென்னை வந்த புதிதில் நடந்த சம்பவம் இது. மளிகைக் கடைக்கு அரிசி வாங்க சென்றேன். அந்த கடையில் உள்ள அரிசி வகையில், 12.50 ரூபாய் அரிசி தான் எங்கள் வீட்டில் வாங்குவோம். அந்த கடையில்:

நான்: அண்ணே, அந்த 12.50 ரூபாய் அரிசில ஒரு கிலோ கொடுங்க...

கடையில் வேலைச் செய்பவர்: 12.50 ல ஒரு கிலோ போட்டாச்சு...

நான்: எவ்வளோ ஆச்சு? (ஏதோ ஞாபகத்தில் கேட்டுவிட்டேன், கேட்ட பின்பு தான் உணர்ந்தேன், இப்படி மடத்தனமாக கேட்டு விட்டோமே என்று)

கடையில் வேலைச் செய்பவர்: (சற்று யோசித்து விட்டு) 12.50 அரிசி ஒரு கிலோ...ம்ம்ம்.... 12.50 ரூபாய் சார்....

ஹீம்ம்ம்.... எல்லோருமே அன்று நல்ல தெளிவு தான் போல....


இரண்டு:

நான் உதகை சுற்றுலா சென்ற போது நடந்த சம்பவம். நண்பர்கள் சிலர் ஐஸ்க்கிரீம் சாப்பிடலாம் என்று ஒரு கடைக்கு சென்றோம். அங்கு விலைப் பட்டியலில் ஒரே வகை ஐஸ்க்கிரீம்-இல் ரூ.14, ரூ.12 என இருந்தது.

நான்: அண்ணே, 14 க்கும் 12க்கும் என்ன வித்யாசம்-ணே?

கடைக்காரர்: ரெண்டும் ஒன்னுதான்...

நான்: (அவர் முடிப்பதற்க்குள்) என்னண்ணே, 14 க்கும் 12க்கும் 2 ரூபாய் வித்யாசம் இருக்கே... ரெண்டும் ஒன்னுதான்னு சொல்றீங்கலே...?

கடைக்காரர்: அவசரப்படரீங்களே... 14க்கும் 12க்கும் 2 வித்தியாசம்ன்னு எனக்கு தெறியாதா? 14 ரூபாய் ஐஸ்க்கிரீம் கோன் - ல வரும், 12 ரூபாய் ஐஸ்க்கிரீம் ப்ளாஸ்டிக் கப் - ல வரும், அதான் வித்தியாசம்.

நான்: ஓ ஹோ ... சரி 12 ரூபாய் ஐஸ்க்கிரீம் கொடுங்க... ஐஸ்க்கிரீம் அதுவே வருமா...?

கடைக்காரர்: அதுவே வராது, நான் தான் எடுத்துக் கொடுக்கணும். உங்ககிட்ட வார்த்தைய கரெக்ட்டா போட்டு பேசனும் போல இருக்கே... இந்தாங்க ஐஸ்க்கிரீம் . இப்போல்லாம் அங்க இங்க ப்ளாஸ்டிக் குப்பை போட்டா நெறைய ஃபயின் போடறாங்க. ஜாக்கிரதை...

நான்: ஓ.. அப்படியா? நான் சாப்பிட்டு இந்தக் குப்பைத் தொட்டிலயே போட்டுட்டு போய்டறேன்... ப்ளாஸ்டிக்க குப்பைத் தொட்டில போடறத்துக்கெல்லாம் ஃபயின் போட மாட்டாங்கல்ல...?

கடைக்காரர்: தம்பி கோயம்பத்தூர்-ங்களா? ரொம்ப கிண்டலா பேசரீங்களே...

நான்: இல்லைங்ண்ணா நான் திருச்சி, கோயம்பத்தூர் வழியா தான் வந்தேன், அதனால இருக்குமோ..? :)

Labels: , , ,

6 Comments:

At January 29, 2008 at 10:25 PM , Blogger துளசி கோபால் said...

:-))))))

இங்கே இருக்கும் 2$ கடையில் போய்,

'இது என்ன விலை?'ன்னு கேட்டது நினைவுக்கு வருது.

வலை உலகுக்கு நல்வரவு.

 
At January 29, 2008 at 10:35 PM , Blogger சேது said...

நன்றி துளசி கோபால்.. :)

 
At January 30, 2008 at 9:27 AM , Blogger சேதுக்கரசி said...

கல்லூரியில் படிக்கும்போது என் அண்ணன் அண்ணிக்குக் குழந்தை பிறந்ததை நண்பிகளிடம் தெரிவிக்கையில் ரொம்ப excited-ஆ இருந்தேன். "ஹேய் எங்க அண்ணிக்குப் பையன் பிறந்திருக்கான்" என்று நான் சொல்ல, அதேபோல் over excitement-உடன் கேட்டுக்கொண்டிருந்த தோழி ஒருத்தி, "என்ன பையன்?" என்றாள் :-) அந்த நினைவு வந்தது!

//உங்ககிட்ட வார்த்தைய கரெக்ட்டா போட்டு பேசனும் போல இருக்கே//

:-)))

 
At January 30, 2008 at 9:42 PM , Blogger சேது said...

இதுவும் நல்லா இருக்கு... :)

- சேது

 
At February 2, 2008 at 2:23 AM , Blogger தினேஷ் said...

நல்லா சிரிக்க வைத்தற்கு மிக்க நன்றி…

தினேஷ்

 
At February 2, 2008 at 11:06 AM , Blogger சேது said...

படித்து சிரித்ததற்கு நன்றி ... :)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home